Category Archives: பணிகள்

அழகாபுரம் திரு. சு.உலகநாதனின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவி

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், அழகாபுரம் தெற்குத்தெருவில் வசிக்கும் திரு. சு. உலகநாதன் அவர்களின் இதய அறுவை சிகிச்சைக்காக, நன்செய் அறக்குழுவினர் திரட்டிய 80,500ரூபாயை திரு. உலகநாதனின் மனைவியின் வங்கிக் கணக்கிற்கு (06/04/2024)அன்று அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்செய் அறக்குழு நன்றி தெரிவித்துக்கொள்கிறது. திரு. உலகநாதன் அவர்கள் விரைவில் நலம் பெற்று வாழ்வாங்கு வாழ முப்பாட்டன் முருகனை வேண்டுகிறோம். #நன்செய்அறப்பணிகள் #நன்செய்அறக்குழுஅழகாபுரம் இந்த தொகை ரூபாய். 80,500த்தை பகிர்ந்துகொண்ட நல்லுள்ளங்கள் பின்வருமாறு:-

Read More

அழகாபும் கிராமத்தைச் சார்ந்த திரு.செல்வராசு அவர்களின் குடும்ப நல்வாழ்விற்காக உதவி

நன்செய் அறக்குழுவின் அறப்பணி.                                                                                                          […]

Read More

அழகாபும் கிராமத்தைச் சார்ந்த மாணவி வினோதினி படிப்புச் செலவிற்கு உதவி

நன்செய் அறக்குழுவின் அறப்பணி.                                                                                                          […]

Read More

திரு. சுந்தரம் அவர்களின் குடும்பத்திற்கு நன்செய் திரட்டி வழங்கிய நிவாரண நிதி

அண்மையில் சிங்கப்பூரில் சிறு தகராறு காரணமாக நடந்த சண்டையில் உயரிழந்த திரு. சண்முகசுந்தரம் அவர்களின் குடும்பத்திற்கு உதவும் பொருட்டு நன்செய் அறக்குழு நிதி திரட்டியது. SGD $300க்கு நிகராக இந்திய மதிப்பில் ரூபாய் 16,574 திரு. சண்முக சுந்தரம் அவர்களின் மனைவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பங்களிப்பு செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை நன்செய் அறக்குழு சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன். #நன்செய்அறப்பணிகள் #நன்செய்அறக்குழுஅழகாபுரம் இந்த தொகை ரூபாய். 16,574த்தை பகிர்ந்துகொண்ட நல்லுள்ளங்கள் பின்வருமாறு:-

Read More

தத்தூர் கிராமத்தைச் சார்ந்த மாணவி ஹரிணியின் படிப்புச் செலவிற்கு உதவி

நன்செய் அறக்குழுவின் அறப்பணி. அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம் தத்தூர் கிராமத்தைச் சார்ந்த மாணவி ஹரிணியின் படிப்புச் செலவிற்கு அவரது தலைமையாசிரியர் கேட்டுக்கொண்டதற்கிணங்க ரூபாய் 20,000 அனுப்பி வைக்கப்பட்டது. கொடையளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். #நன்செய்அறப்பணிகள் #நன்செய்அறக்குழுஅழகாபுரம் இந்த தொகை ரூபாய். 20,000த்தை பகிர்ந்துகொண்ட நல்லுள்ளங்கள் பின்வருமாறு:-

Read More

அழகாபுரம் திரு. ஆதிமூலம் கார்த்திகேயனின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி

சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வரும் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், அழகாபுரம் கிராமத்தைச்சார்ந்த திரு. ஆதிமூலம் கார்த்திக்கேயன் அவர்களின் குடும்பத்தார் உதவிச் செய்யுமாறுக் கேட்டுக்கொண்டதற்கிணங்க நன்செய் அறக்குழுவின் மூலம் 70,000 ரூபாய் நன்கொடையாக அனுப்பி வைக்கப்பட்டது. விரைவில் நலம் பெற்று வாழ்வாங்கு வாழ முப்பாட்டன் முருகனை வேண்டுகிறோம். #நன்செய்அறப்பணிகள் #நன்செய்அறக்குழுஅழகாபுரம் இந்த தொகை ரூபாய். 70,000த்தை பகிர்ந்துகொண்ட நல்லுள்ளங்கள் பின்வருமாறு:-  

Read More

நன்செய் அறக்குழு இளைஞர்கள் செய்த கிராமசபைக் குறித்த மக்கள் விழிப்புணர்வு

நன்செய் அறக்குழுவினர் சார்பாக மக்களுக்கு கிராம சபைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஊரின் முக்கிய இடத்தில் கிராம சபைக் குறித்த விளம்பரப் பலகை வைக்கப்பட்டது.     ஊராட்சி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.         மேலும் நன்செய் அறக்குழுவினர் மக்களுக்கு கிராம சபைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக முக்கிய 30 கேள்விகள் மற்றும் பதில்கள் அடங்கிய 2000 துண்டு பிரசுரங்களை ஊராட்சி முழுவதும் வழங்கப்பட்டது.     […]

Read More

ALL THE CHILDREN HOMEக்கு நன்செய் வழங்கிய நன்கொடை

சென்னை வியாசர்பாடியில் இயங்கிவரும் “ALL THE CHILDREN” குழந்தைகள் காப்பகத்திலிருந்து நன்செய் குழுவைச் சேர்ந்த தம்பி கொ. செல்வக்குமரனைத் தொடர்புகொண்டு கொரோனாத் தொற்றின் காரணமாக பணப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், உங்களால் ஏதேனும் பண உதவி செய்ய இயலுமா என வேண்டுகோள் வைத்தனர். அந்த வேண்டுகோளை ஏற்று நன்செய் அறக்குழுவினர் தங்களால் இயன்ற பணத்தை திரட்டி ரூபாய். பத்தாயிரத்தை ALL THE CHILDREN HOMEக்கு அனுப்பி வைத்துள்ளோம். இந்த தொகை ரூபாய். 10,000த்தை பகிர்ந்துகொண்ட நல்லுள்ளங்கள் பின்வருமாறு:-

Read More

அழகாபுரம் கிராமத்தில் பொதுமக்களுக்கு நன்செய் அறக்குழு வழங்கிய கபசுரக் குடிநீர் மற்றும் விழிப்புணர்வு துண்டறிக்கை

கொரோனா நோய் தொற்றிலிருந்து மக்களைக் காக்கும் பொருட்டும், நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் பொருட்டும் இன்று அழகாபுரம் கிராமத்தில் நன்செய் அறக்குழுவைச் சார்ந்த இளைஞர்களால் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.  

Read More