குன்றத்தூர் மஞ்சுளா அவர்களுக்கு நன்செய் அறக்குழு செய்த உதவி
சென்னைக்கு அருகில் உள்ள குன்றத்தூரில் வசிக்கும் மஞ்சுளா என்பவருக்கு கணவர் இல்லை பெண் 12 வகுப்பு படிக்கிறாள். பையன் 6 வகுப்பு படிக்கிறான். வாடகை வீடு. வீட்டு வேலை, 100 நாள் வேலை இப்படி பார்த்து குழந்தைகளை வளர்த்து கொண்டு இருந்தார்.
கொரானவால் வீட்டு வேலையும் இல்லை. 100 நாள் வேலையும் சரியாக கிடைக்கவில்லை. அவரது குடும்பம் மிகவும் வறுமை சூழ்நிலையில் இருந்த காரணத்தால் டீ வியாபாரம் செய்யலாம் என்று முடிவு எடுத்தார். ஆனால் அந்த டீ கேனை விலைக்கொடுத்து வாங்க முடியாத சூழ்நிலையில் இருந்தார். டீ கேன் வாங்குவதற்கு உதவி கேட்டார். அந்த குடும்பத்தில் வறுமையை போக்க டீ கேன் வாங்க நன்செய் அறக்குழு ரூபாய். 2500 வழங்கி அவர்கள் சம்பாதிக்க வழிவகை செய்து கொடுத்தது.

திருமதி மஞ்சுளா அவர்களுக்கு உதவிய உள்ளங்கள்
குன்றத்தூர் மஞ்சுளா அவர்களுக்கு உதவி
