-
By:
- admin
- No comment
நன்செய் பட்டறை
நன்செய் அறக்குழுவிற்குச் சொந்தமானக் கட்டடத்தில், இரு அறைகளைப் பயிற்சி வகுப்புகளுக்காக ஒதுக்கி, வெளிநாடுகள் மற்றும் வெளியூர்களில் வேலை செய்து வரும் திறனாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் உதவியைப் பெற்று நமது ஊராட்சியைச் சேர்ந்த சிறுவர்களுக்கு வார இறுதி நாட்களில் பயிற்சி வகுப்புகள் எடுக்க ஏற்பாடு செய்தல்; அதன் மூலம் ஆங்கிலம், வரலாறு, இலக்கியம், மருத்துவம் போன்றவற்றில் புலமைப் பெற்றவர்கள், பாடநூல்களையும் தாண்டி மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து அவர்களின் அறிவை பெருக்கப் பேருதவியாக இருக்கலாம்.
