நன்செய் அறக்குழுவின் ஜூன் 2023 மாதக் கூடுதல்
நன்செய் அறக்குழுவின் மாதக்கூடுதல் (18-06-2023)அன்று மாலை 6.00pm அளவில் சிங்கப்பூர் தோப்பாயோ பூங்காவில் நடைபெற்றது.
இன்றைய நன்செய் குழுவின் கூடுதலில் திரு. ப. வேல்முருகன், ம. இளையராஜா, இரா. பாலமுருகன்,கொ. செல்வக்குமரன், செ. வீரவேல், செ. பாஸ்கர், மு. அறிவழகன், ஆகியோர் நேரடியாகவும், ரெ. சுரேஷ், கருக்கை சாமிநாதன், ச. ரகுநாத், தி. ஆனந்தராஜ் ஆகியோர் ஆன்லைன் மூலமாகவும் கலந்துகொண்டனர்.
இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.


நல்லோர் வட்டத்தின் நம்பிக்கை செய்தி:-
அழகாபுரம் நன்செய் அறக்குழு இளைஞர்கள் தங்கள் கிராமத்தின் வளர்ச்சிக்காக அனைவரும் ஒன்று சேரந்து மூன்று ஆண்டுகளில் 60 லட்சம் ரூபாய் உருவாக்கி தற்சார்பு சாதனை!!!
இந்தச் சாதனை நல்லோர் வட்டத்தின் நம்பிக்கை செய்திகளில் இடம்பெற்றுள்ளது.
இந்த சாதனையை நிகழ்த்த ஒத்துழைத்த அனைத்து நன்செய் உறவுகளுக்கும், செய்தி வெளியிட்ட நம்பிக்கைச் செய்திகளுக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
