திரு. சுந்தரம் அவர்களின் குடும்பத்திற்கு நன்செய் திரட்டி வழங்கிய நிவாரண நிதி
அண்மையில் சிங்கப்பூரில் சிறு தகராறு காரணமாக நடந்த சண்டையில் உயரிழந்த திரு. சண்முகசுந்தரம் அவர்களின் குடும்பத்திற்கு உதவும் பொருட்டு நன்செய் அறக்குழு நிதி திரட்டியது. SGD $300க்கு நிகராக இந்திய மதிப்பில் ரூபாய் 16,574 திரு. சண்முக சுந்தரம் அவர்களின் மனைவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பங்களிப்பு செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை நன்செய் அறக்குழு சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன். #நன்செய்அறப்பணிகள் #நன்செய்அறக்குழுஅழகாபுரம் இந்த தொகை ரூபாய். 16,574த்தை பகிர்ந்துகொண்ட நல்லுள்ளங்கள் பின்வருமாறு:-
Read Moreதத்தூர் கிராமத்தைச் சார்ந்த மாணவி ஹரிணியின் படிப்புச் செலவிற்கு உதவி
நன்செய் அறக்குழுவின் அறப்பணி. அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம் தத்தூர் கிராமத்தைச் சார்ந்த மாணவி ஹரிணியின் படிப்புச் செலவிற்கு அவரது தலைமையாசிரியர் கேட்டுக்கொண்டதற்கிணங்க ரூபாய் 20,000 அனுப்பி வைக்கப்பட்டது. கொடையளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். #நன்செய்அறப்பணிகள் #நன்செய்அறக்குழுஅழகாபுரம் இந்த தொகை ரூபாய். 20,000த்தை பகிர்ந்துகொண்ட நல்லுள்ளங்கள் பின்வருமாறு:-
Read Moreநன்செய் அறக்குழுவின் ஜூன் 2023 மாதக் கூடுதல்
நன்செய் அறக்குழுவின் மாதக்கூடுதல் (18-06-2023)அன்று மாலை 6.00pm அளவில் சிங்கப்பூர் தோப்பாயோ பூங்காவில் நடைபெற்றது. இன்றைய நன்செய் குழுவின் கூடுதலில் திரு. ப. வேல்முருகன், ம. இளையராஜா, இரா. பாலமுருகன்,கொ. செல்வக்குமரன், செ. வீரவேல், செ. பாஸ்கர், மு. அறிவழகன், ஆகியோர் நேரடியாகவும், ரெ. சுரேஷ், கருக்கை சாமிநாதன், ச. ரகுநாத், தி. ஆனந்தராஜ் ஆகியோர் ஆன்லைன் மூலமாகவும் கலந்துகொண்டனர். இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. நல்லோர் வட்டத்தின் நம்பிக்கை செய்தி:- அழகாபுரம் […]
Read Moreஅழகாபுரம் திரு. ஆதிமூலம் கார்த்திகேயனின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி
சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வரும் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், அழகாபுரம் கிராமத்தைச்சார்ந்த திரு. ஆதிமூலம் கார்த்திக்கேயன் அவர்களின் குடும்பத்தார் உதவிச் செய்யுமாறுக் கேட்டுக்கொண்டதற்கிணங்க நன்செய் அறக்குழுவின் மூலம் 70,000 ரூபாய் நன்கொடையாக அனுப்பி வைக்கப்பட்டது. விரைவில் நலம் பெற்று வாழ்வாங்கு வாழ முப்பாட்டன் முருகனை வேண்டுகிறோம். #நன்செய்அறப்பணிகள் #நன்செய்அறக்குழுஅழகாபுரம் இந்த தொகை ரூபாய். 70,000த்தை பகிர்ந்துகொண்ட நல்லுள்ளங்கள் பின்வருமாறு:-
Read Moreஅரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டார அளவிலான கலைத்திருவிழா – போட்டிகளில் கலந்துகொண்டு – வெற்றிப்பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டார அளவிலான கலைத்திருவிழா – போட்டிகளில் கலந்துகொண்டு – வெற்றிப்பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா 07-03-2023 அன்று மதியம் 2 மணியளவில் ஆண்டிமடம் வன்னியர் குலஷத்ரியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி. முனியம்மா அவர்கள் தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்ப்பார்வையாளர் திரு.அருமைராஜ் அவர்கள் வரவேற்று பேசினார். மாவட்ட இல்லம் தேடிக்கல்வித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் (CSO) மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் திரு.திருப்பதி, திரு.ராஜா, மற்றும் ஆண்டிமடம் வட்டார ஆசிரியர் […]
Read More