Monthly Archives: February 2021

நன்செய் அறக்குழுவின் 7வது வாரக் கூடுதல் பற்றிய அறிவிப்பு

நன்செய் அறக்குழுவின் 7வது வாரந்திர கூடுதல் Date: 13-02-2021 (சனிக்கிழமை) Topic: Nansei Weekly Meeting Time: 7.00PM (India Time) Join Zoom Meeting https://us02web.zoom.us/j/87044526395?pwd=V0VIZk5NT1hGLy9GaUdBREw2eTcwUT09 Meeting ID : 870 4452 6395 Passcode : 932818 நன்செய் அறக்குழுவின் செயல்பாடுகளையும், எதிர்காலத் திட்டங்களையும் தெரிந்துகொள்ளவும், எங்களுடன் இணைந்து நம் ஊருக்கு தொண்டு செய்யவும் விருப்பமுள்ளோர் எங்களுடன் வாராந்திர கூடுதலில் கலந்துகொண்டு உங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கலாம்.

Read More

நன்செய் அறக்குழு நடத்தும் மாதாந்திர வினா-விடைப் போட்டி

நன்செய் அறக்குழு நடத்தும் வினா-விடைப் போட்டி   இம்மாத போட்டிக்குரிய புத்தகம் : அக்னிச் சிறகுகள் வகை: வாழ்க்கை வரலாறு ஆசிரியர் : ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் & அருண் திவாரி  போட்டி நாள்: 28-02-2021 இடம் : சமுதாயக் கூடம் அழகாபுரம்    மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கும் பொருட்டு மாதம் ஒரு புத்தகத்தை தேர்ந்தெடுத்து நன்செய் அறக்குழு அறிவிக்கும். அறிவிக்கப்பட்ட புத்தகத்தை மாணவர்கள் வாங்கி முழுமையாகப் படிக்க வேண்டும். அப்புத்தகத்திலிருந்து 25 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு […]

Read More

நன்செய் அறக்குழுவின் 6வது வாரந்திர கூடுதல்

நன்செய் அறக்குழுவின் 6வது வாரக்கூடுதல் Zoom செயலி மூலம் சிறப்பாக நடைபெற்றது. சிங்கப்பூரிலிருந்து திரு. பழனிவேல் வேல்முருகன், திரு. ரெங்கசாமி சுரேஷ், திரு. ராமச்சந்திரன் பாலமுருகன், திரு. கொளஞ்சி செல்வக்குமரன், திரு. தன்ராஜ் பிரகாஷ், திரு. செல்வராஜ் வீரவேல், திரு. காமராசு பாலமுருகன், திரு. செல்வராசு வினோத் ஆகியோரும், அமீரகத்திலிருந்து திரு. ராஜேந்திரன் கருப்பசாமி, திரு. பிரபு, திரு. வேல்முருகன் அவர்களும், தமிழகத்திலிருந்து திருமதி பாலமுருகன் சுமதி, திரு. முருகேசன் அறிவழகன், திரு. ரவி ராஜ்குமார், திரு. […]

Read More

குன்றத்தூர் மஞ்சுளா அவர்களுக்கு நன்செய் அறக்குழு செய்த உதவி

சென்னைக்கு அருகில் உள்ள குன்றத்தூரில் வசிக்கும் மஞ்சுளா என்பவருக்கு கணவர் இல்லை பெண் 12 வகுப்பு படிக்கிறாள். பையன் 6 வகுப்பு படிக்கிறான். வாடகை வீடு. வீட்டு வேலை, 100 நாள் வேலை இப்படி பார்த்து குழந்தைகளை வளர்த்து கொண்டு இருந்தார். கொரானவால் வீட்டு வேலையும் இல்லை. 100 நாள் வேலையும் சரியாக கிடைக்கவில்லை. அவரது குடும்பம் மிகவும் வறுமை சூழ்நிலையில் இருந்த காரணத்தால்  டீ வியாபாரம் செய்யலாம் என்று முடிவு எடுத்தார். ஆனால் அந்த டீ […]

Read More

அழகாபுரம் ஊரைப்ற்றிய ஆய்வை மேற்கொள்ள நன்செய் அறக்குழு செய்த ஏற்பாடு

கடந்த 28-11-2020 அன்று நன்செய் அறக்குழு விடுத்த அழைப்பை ஏற்று, தஞ்சை சரஸ்வதி நூலகத்தின் ஓலைச்சுவடி பிரிவின் தலைவரும், கல்வெட்டு மற்றும் வரலாற்று ஆய்வாளருமான முனைவர் திரு. மணிமாறன் மற்றும் அவரது குழுவினர் நமது ஊரை ஆய்வு செய்தனர். அவர்களை ஆண்டிமடத்தில் தங்க வைக்கவும், மதிய உணவும் நன்செய் அறக்குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டது. ஐயா அவர்களின் குழு முதலில் சிவன்கோவிலை ஆய்வு செய்தார்கள்.     அதைத் தொடர்ந்து சின்ன ஏரிக்கரையில் அமைந்துள்ள பழங்கால கற்சிலைகளை ஆய்வு […]

Read More

நன்செய் குழுவில் பயணித்த சுரேஷ் அவர்களின் குடும்பத்திற்கு நன்செய் திரட்டி வழங்கிய நிவாரண நிதி

சிங்கப்பூரில் பணியாற்றிகொண்டு நன்செய் குழுவில் பயணித்து வந்த திரு. சுரேஷ் அவர்கள் கடந்த 30-11-2020 ஆண்டு அகால மரணமடைந்தார். அவரது குடும்பத்திற்கு உதவும் நோக்கில் நன்செய் அறக்குழுவானது தன்னால் இயன்ற நிதியைத் திரட்டி ரூபாய் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயை அவரது பெற்றோரிடம் வழங்கியது. சுரேஷின் குடும்பத்திற்கு உதவிய உள்ளங்கள்:

Read More

மாற்றுத்திறனாளி மாணவர் முனிரத்தினத்தின் படிப்பிற்கு நன்செய் வழங்கிய நன்கொடை

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவர் திரு. முனிரத்தினத்தின் முனைவர் படிப்பிற்கு தேவையான புத்தகங்கள் ரூபாய். 4000 மதிப்பில் வாங்கிக்கொள்ள பணம் அனுப்பப்பட்டது.   அதைத்தொடர்ந்து அவரின் தேர்வுக்கட்டணத்திற்கு தேவையான ரூபாய். 10,000 நன்செய் அறக்குழு மூலம் அனுப்பிவைக்கப்ட்ட்டது. DBS iBanking-Munirathinam

Read More

மரம் கருப்பையா அவர்களின் மருத்துவச் செலவிற்கு நன்செய் அறக்குழு திரட்டிய உதவித்தொகை

மரம் கருப்பையா அவர்களை நன்செய் அறக்குழுவினர் சந்தித்து அவர்களுக்கு  நன்செய் சார்பாக ரூபாய் பத்தாயிரம் ரூபாய் (10,000) ஐயா அவர்களின் மருத்துவச் செலவிற்காக ஐயாவின் மகனிடம் வழங்கப்பட்டது.     மரம் கருப்பையா அவர்களுக்கு நன்கொடை வழங்கிய உள்ளங்கள் மரம் கருப்பையா அவர்களுக்கு உதவி

Read More

நன்செய் அறக்குழு தயாரித்த அழகாபுரம் கிராமத்தின் வரைபடம்

அழகாபுரம் மக்களுக்கு உதவும் நோக்கில் நமது கிராமத்தின் வரைபடத்தை புல எண்களோடும், முக்கிய கோவில் குளங்களின் இருப்பிடத்தை சுட்டியும் நன்செய் அறக்குழுவினரால் வரையப்பட்டுள்ளது. மேலும் மக்கள் தங்களின் நிலம் மற்றும் வீடுகள் உள்ள இடத்திற்கான வரைபடத்தை கேட்டு தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்தால் நாங்கள் வரைந்து தருகிறோம். ஊரில் வரைபடத்தை விரும்புவோர் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். Azhakapuram-Village Map

Read More

தைப்பூசத்திற்கு விடுமுறை அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி அறிவிப்பு

தமிழர்களின் புனித நாளான தைப்பூசத் திருநாளுக்கு அரசு பொதுவிடுமுறை அறிவித்து தமிழர்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றி தமிழர் பண்பாட்டை மீட்டெடுத்த தமிழக முதல்வர் எடப்படியார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டு அழகாபுரம் ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Read More